வெள்ளி, 4 செப்டம்பர், 2026

"சூலூர் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே கல்லூரி மாணவர்களின் அட்ராசிட்டி" ; சாலையில் சாகசம் செய்து பீதியை ஏற்படுத்திய 6 பேர் கைது!

SHARE

இரண்டு பைக்கில் 6 பேர் பறந்து சென்று ஓட்டுநர்களை அச்சுறுத்தல்: இணையத்தில் வைரலான வீடியோவால் நடவடிக்கை!

 கோவை - திருச்சி சாலையில், காவல் நிலையம் அருகிலேயே இரண்டு இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் வீதம் ஆபத்தான முறையில் பயணம் செய்து, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வால்த்தனமான செயல்களில் ஈடுபட்ட 6 கல்லூரி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் கண்டனங்களைப் பெற்று உள்ளது.

கோவை - திருச்சி சாலையில் உள்ள சூலூர் காவல் நிலையத்திற்கு மிக அருகில், அப்பகுதியில் வழக்கம் போல் பொதுமக்களும் வாகனங்களும் சென்று கொண்டு இருந்தன. அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் வீதம் மொத்தம் 6 கல்லூரி மாணவர்கள் சாலையில் அதிவேகமாகவும், ஒன்றன் பின் ஒன்றாக ஆபத்தான முறையிலும் பைக் ரேஸ் செல்வது போல அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்.

​சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், விபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இவர்கள் வண்டியை மாற்றி, மாற்றி வளைத்து இயக்கி உள்ளனர்.

மாணவர்களின் இந்த விபரீதச் செயலைக் கண்ட அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர், அதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வைரலாகி வருகிறது.

​காவல் நிலையம் அமைந்து உள்ள முக்கியப் பகுதியிலேயே கல்லூரி மாணவர்கள் இதுபோன்று பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் விதிகளை மீறிச் செயல்பட்டு இருப்பது கோவை மக்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: