வெள்ளி, 4 செப்டம்பர், 2026

மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவத்தில் கைதான காதலனின் கடனுக்காக கொள்ளைக்காரியாக மாறிய கல்லூரி மாணவி - வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்!

SHARE

மூதாட்டியிடம் நகை பறிப்பில் கைதான கல்லூரி மாணவி காதலனின் கடனை அடைக்கவும், சொகுசு, வாழ்க்கை கார் வாங்கவும் கொள்ளைக்காரியாக மாறியதாக அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் சரஸ்வதி (70). இவர், கடந்த 30ம் தேதி வீட்டின் முன் உறவினர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் மாஸ்க்குடன் சரஸ்வதி அணிந்து இருந்த 4 பவுன் நகையை பறித்து அங்கு தயாராக இருந்த இளம்பெண்ணுடன் ஸ்கூட்டரில் தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர். அப்போது

சி.சி.டி.வி கேமராவில் சிக்கிய ஸ்கூட்டர் எண்ணை வைத்து திருப்பூரை சேர்ந்த பரணிதரன் (21) மற்றும் அவரது காதலி நெல்லையை சேர்ந்த சிந்து (21) ஆகியோர் என்பதும், இருவரும் கோவை கே.ஜி.சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2 ம் ஆண்டு எம்.பி.ஏ ஒன்றாக படித்து வந்ததும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், போலீசாரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்து உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

பரணிதரன் ஜாலியாக சுற்ற தனது நண்பர்களிடம் கடன் வாங்கி உள்ளார். அதனை அடைக்கவும், சொகுசு கார் வாங்கி ஆடம்பரமாக வாழ அசைப்பட்டு உள்ளனர். இதனால் பெண்களிடம் நகை பறிக்க திட்டமிட்டு உள்ளனர். அதற்காக சி.சி.டி.வி கேமரா இல்லாத இடங்களை இருவரும் தேடி அலைந்து உள்ளனர். பின்னர் வெள்ளலூரை கறிக்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டை தேர்வு செய்து சரஸ்வதியிடம் நகை பறித்து உள்ளனர். அந்த நகையை ஓரிரு நாட்கள் கழித்து விற்பனை செய்து பணமாக்கி கொள்ளலாம் என திட்டமிட்டு உள்ளனர். ஆனால் அதற்குள் இருவரும் போலீசாரிடம் சிக்கி கொண்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

காதலனின் கடனை அடைக்கவும், சொகுசு கார் வாங்கவும் கல்லூரி மாணவி கொள்ளைக்காரியாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: