வியாழன், 3 செப்டம்பர், 2026

கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சாட்சிகளை மிரட்டிய அண்ணன், தம்பி கைது - ஜாமீன் ரத்து !

SHARE

கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சாட்சிகளை மிரட்டிய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம் இவருடைய அண்ணன் ராம்குமார் இவர்கள் மீது 2024 ஆம் ஆண்டு கிணத்துக்கடவு பகுதியில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாரி செல்வம், ராம்குமாரும் ஜாமீனில் உள்ளனர். ஆனாலும் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்கள்.

நேற்று மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. நீதிபதி சுந்தரராஜன் வழக்கை விசாரித்தார். அப்பொழுது அரசம்பாளையத்தை சேர்ந்த ஸ்ரீதேவி, கௌஷிக் ஆகியோர் சாட்சி சொல்ல வந்தனர். மாரிசெல்வமும், ராம்குமாரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.

அவர்கள் இரண்டு பேரும் திடீரென நீதிபதி முன்னிலையில் சைகை மூலம் சாட்சிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். அதை கவனித்த நீதிபதி சுந்தரராஜ், அவர்கள் இரண்டு பேரின் ஜாமீனை வழக்கு விசாரணை முடியும் வரை ரத்து செய்தார். மேலும் அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க பிடிவாதம் பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் மாரிச்செல்வம், ராம்குமார் ஆகியோர் கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிபதி முன்னிலையில் சாட்சிகளை மிரட்டிய இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: