சனி, 5 செப்டம்பர், 2026

"மாநகர ஆணையருக்கு சல்யூட் அடித்த காவலரின் செல்லக் குழந்தை" ; கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

SHARE

ஜி.ஆர்.டி பள்ளி அருகே 'சிங்கப்படை பிங்க் பூத்' திறப்பு விழா: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்!

 கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஜி.ஆர்.டி பள்ளி அருகே பெண்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட 'சிங்கப்படை பிங்க் பூத்' (Singappadai Pink Booth) திறப்பு விழாவின் போது, கோவை மாநகரக் காவல் ஆணையருக்குக் காவலர் ஒருவரின் பிஞ்சுக் பெண் குழந்தை கம்பீரமாகச் சல்யூட் அடித்த காட்சி அங்கு திரண்டு இருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

கோவை மாநகரில் பெண்கள், மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்லும் மகளிரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முக்கியப் பகுதிகளில் மாநகரக் காவல் துறை சார்பில் 'சிங்கப்படை பிங்க் பூத்' மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.ஆர்.டி பள்ளி அருகே புதிதாக அமைக்கப்பட்ட 'சிங்கப்படை பிங்க் பூத்' திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கோவை மாநகரக் காவல் ஆணையர் கலந்து கொண்டு புதிய பிங்க் பூத் மையத்தைத் திறந்து வைத்தார்.

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பிஞ்சுக் பெண் குழந்தையின் சல்யூட்:

விழா நிகழ்வின் போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த பெண் காவலர் ஒருவரின் சிறிய குழந்தை, சீருடையில் இருந்த கோவை மாநகரக் காவல் ஆணையரைக் கண்டதும், சிறிதும் தயக்கமின்றி மிடுக்காக நின்று அவருக்குத் தனது பிஞ்சுக் கரங்களால் கம்பீரமாகச் சல்யூட் (Salute) அடித்தது.

காவலரின் குழந்தையின் இந்த எதிர்பாராத மரியாதையைக் கண்டு நெகிழ்ந்து போன மாநகரக் காவல் ஆணையர், உடனடியாக அக்குழந்தையைப் சல்யூட் (Salute) அடித்தது. புன்னகையோடு மகிழ்ச்சியை கொண்டார்.

இந்த அழகிய மற்றும் உணர்ச்சிப் பூர்வமான தருணம் புகைப்படமாகவும் வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் பரவி, நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்று மிக வேகமாக வைரலாகி வருகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: