ஞாயிறு, 14 ஜூன், 2026

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிக்க உதவிய காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது ; பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த 3 காவலர்கள் சஸ்பெண்ட் - கோவை மாநகர காவல் துறை நடவடிக்கை !!!

SHARE

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிக்க உதவிய காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது ; பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த 3 காவலர்கள் சஸ்பெண்ட் - கோவை மாநகர காவல் துறை நடவடிக்கை !!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிம்முடு அஜித் குமார். (வயது 35) இவர் கார் விற்பனை தொழிலில் ஏமாற்றி பலரை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 30 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளது. 

 திருப்பூர் மாவட்டத்திலும் இதே போல கார் விற்பனை செய்வது போல 2 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்து உள்ளார். இந்த வழக்கில் பிம்முடு அஜித் குமாரை திருப்பூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். 

அதன் பிறகு அவர் கோவை மத்திய சிறையில் கடந்த வாரம் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் உடல்நிலை சரியில்லை என கூறியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் , கோவை மத்திய சிறையில் இருந்து கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

அங்கு அவருக்கு காலில் ஏற்பட்ட காய மற்றும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பிம்முடு அஜித்குமார் சிகிச்சை பெற்று வந்த வார்டில் மேலும் 3 கைதிகள் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெரும் கைதிகளுக்கு தலா ஒரு போலீஸ் வீதம் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு கோவை அரசு ஆஸ்பத்திரி வார்டில் இருந்து பிம்முடு அஜித் குமார் தப்பி ஓடினார். கைதிகள் சிகிச்சை பெறும் வார்டுக்கும் மகளிர் சிகிச்சை பிரிவு வார்டுக்கும் இடையில் தடுப்பு வைக்கப்பட்டு இருந்தது. 

அதன் அருகில் கழிப்பறை இருந்தது. அதை பயன்படுத்தி அதில் இருந்த துவாரம் வழியாக பிம்முடு அஜித் குமார் நைசாக நுழைந்து மகளிர் சிகிச்சை பிரிவு வார்டு வழியாக சென்று மருத்துவமனையை விட்டு வெளியேறி உள்ளார்.. அப்போது அவர் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் துணியை கொண்டு மூடி நடந்து சென்று உள்ளார். 

இது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. பிம்முடு அஜித் குமார் பிடிக்க உடனடியாக மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். 

போலீசார் அவரை வலை வீசி தேடினர். நள்ளிரவில் விடிய விடிய நடந்த தேர்தல் வேட்டையில் பிம்முடு அஜித் குமார் தப்பி ஓடிய 5 மணி நேரத்தில் மீண்டும் போலீசில் சிக்கி விட்டார்.

சேலம் மேச்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் பிம்முடு அஜித்குமாரை மீண்டும் மடக்கி பிடித்து கைது செய்தனர். 

 அதன் பிறகு பிம்முடு அஜித் குமார் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிம்முடு அஜித்குமார் நீண்ட நாட்களாக திட்டம் தீட்டி தப்பிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் அவர் தப்பிக்க உதவியாக இருந்த கார் ஓட்டுநர் விஜயகுமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த இரண்டாம் நிலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும்

 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பிய சம்பவத்தில் போலீசாரின் கவனக்குறைவு குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இது தொடர்பாக கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் பாதுகாப்பில் கவன குறைவாக இருந்த காவலர்கள் எஸ்.எஸ்.ஐ பெரியசாமி, பாரதிதாசன், அசோக்குமார் ஆகிய மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: