புதன், 17 ஜூன், 2026

முதல்வர் விஜய்க்கு அனுப்பப்பட்ட காதொலி கருவி - நூதனம் போராட்டத்தில் நடத்திய சமூக ஆர்வலர் மணி !!!

SHARE

 முதல்வர் விஜய்க்கு அனுப்பப்பட்ட  காதொலி கருவி - நூதனம் போராட்டத்தில் நடத்திய சமூக ஆர்வலர் மணி !!!



அவரது மனுவில் தமிழகத்தில் தினம், தினம் பச்சிளம் குழந்தைகள் பெண்கள் வன்கொடுமைகள் அதிகரிக்கின்றன. நீங்கள் ஏற்கனவே சத்தமாக குரல் கொடுத்து வந்தீர்கள். இப்போது பச்சிளம் குழந்தைகள், பெண்கள், பெற்றோர்கள், கதறல்கள் உங்கள் காதுக்கு கேட்கவில்லையா..???

அவ்வாறு உங்களுக்கு காது கேட்கவில்லை எனில் சமூக நலன் கருதி உங்களுக்கு காது கேட்கும் கருவி "செவிட்டு மிஷின்" என் சார்பாக அனுப்பி உள்ளேன். இந்த செவிட்டு மெஷின் உதவியோடு நீங்கள் நடிகராகவோ அல்லது முதல்வராகவோ செவி சாய்த்து உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ஜனநாயகத்தின் முதல்தூண் சட்டமன்றம் என்றால் நான்காவது தூண் பத்திரிகை. அப்படிப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட நடத்தாத நீங்கள் நடுநிலையோடு மக்களுக்கு பணியாற்ற முடியுமா ??? என்ற கேள்வியுடன் தனது மனுவை நிறைவு செய்து கோவை கலெக்டர் அலுவலகம் அருகே போஸ்ட் ஆபீஸ்ஸில் வழியே பார்சல் முதல்வர்தனி பிரிவுக்கு அனுப்பினார்.
SHARE

Author: verified_user

0 கருத்துகள்: