வெள்ளி, 26 ஜூன், 2026

சாய் பாபாவின் தங்கத்தேரை இழுத்த த.வெ.க வினர் : ‘தூற்றுபவர்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம்’ – கோவையில் புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் வி. ராஜ்குமார் !!!

SHARE

சாய் பாபாவின் தங்கத்தேரை இழுத்த த.வெ.க வினர் : ‘தூற்றுபவர்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம்’ – கோவையில் புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் வி. ராஜ்குமார் !!!

​ஒரே மாதத்தில் மக்கள் மனதைக் கவர்ந்த முதல்வர் விஜய்; நாகசாயி மந்தீரில் பக்திப் பெருக்குடன் 100 ஆண்டு ஆயுள் வேண்டி மெகா பிரார்த்தனை !!!

  தமிழக முதல்வருமான ஜோஸப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், பொருப்பாளர்கள் முன்னிலையில் கொண்டாடபட்டது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கபட்டது. இந்த நிலையில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி. ராஜ்குமார் தலைமையில், கோவை சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு தங்கத்தேர் இழுக்க பட்டது. பொதுவாக கோவை சாய்பாபா கோவில் பகுதியில் அமைந்து உள்ள நாகசாயி மந்தீர் திருக்கோவிலில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நாட்களில், இக்கோவிலுக்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் இருக்கும் இந்த நாளில் கூடுதல் சிறப்பம்சமாக தமிழக வெற்றிக் கழகம் கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சாய்பாபா எழுந்தருளி திருக்கோவிலை சுற்றி வந்தார். இதில் திறலான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபா அருள் பெற்றனர். பின்னர் அனைவருக்கும் திருக்கோவில் சார்பாக பிரசாதங்கள் வழங்கபட்டது.

இதைதொடர்த்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி. ராஜ்குமார் கூறியதாவது.. 

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான ஆட்சி அமைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஆட்சியாக நடைபெற்று வருகின்றது என்பது பொதுமக்கள் எங்கள் மீது காட்டும் அன்பில் தெரிவிக்கின்றது. எத்தனை நல்லது மக்களுக்கு செய்தாலும், குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் குறை கூறி கோண்டு தான் இருப்பார்கள் அதனை தமிழக வெற்றிக் கழக தலைமை முதல் அடிப்படை உறுப்பினர் வரை யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார். அதன் படி நாங்கள் அக்கருத்துகளை பற்றி எல்லாம்  கவலை பட மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்ததுடன் இன்றைய தங்கதேர் இழுத்ததன் நோக்கமே மக்களின் முதல்வராக உள்ள தலைவர் விஜய் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து இதனை செய்ததாக தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: