புதன், 17 ஜூன், 2026

கோவை, மதுக்கரை பகுதியில் இளம் பெண்ணிடம் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு வழிப்பறியில் ஈடுபட்ட நபரை ; கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்...

SHARE

 கோவை, மதுக்கரை பகுதியில் இளம் பெண்ணிடம் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு வழிப்பறியில் ஈடுபட்ட நபரை ; கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்...

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் வசிக்கும் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த 11.06.2026 அன்று தொப்பம்பாளையம் வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்த போது, அவர் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென்று கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு சென்று உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் மதுக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழிப்பறி வழக்கில் விரைந்து குற்றவாளியை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் உத்தரவிட்டதன் பேரில், மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இன்று (17.06.2025) மரப்பாலம் அருகே காவல் துறையினர் வாகன சோதனை மேற்கொண்ட போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த நிஜாருதீன் @அசரத் நிசார் (29) என்பவரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அந்த வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் அந்த நபரை கைது செய்து தங்க செயின் மற்றும் வழிப்பறி குற்றங்களுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் -2* ஆகியவற்றை பறிமுதல் செய்து, அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: