திரிபுரா எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய வங்கதேச நபரைச் சுட்டு வீழ்த்தியது எல்லை பாதுகாப்பு படை.....
கடந்த வெள்ளிக்கிழமை மாலை, திரிபுரா எல்லையில் உள்ள உனகோடி மாவட்டம், கைலாஷஹர் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற வங்கதேசத்தைச் சேர்ந்த ஊடுருவல்காரர் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) சுட்டுக் கொன்றது.
பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தத் துணிந்த ஊடுருவல்காரர்கள் குழுவை நோக்கி, தற்காப்புக்காக பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கொல்லப்பட்ட நபர் வங்கதேசத்தைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் (26) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இவர்களிடம் இருந்து கடத்தல் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை எல்லை பாதுகாப்பு படை கைப்பற்றி உள்ளது.

0 கருத்துகள்: