வியாழன், 9 ஜூலை, 2026

அதிகாரிகளின் ‘அலட்சிய’ 6 ஆண்டு கால மக்கள் போராட்டம்: கோவை அருகே பேரூராட்சியை அதிரடியாக முற்றுகையிட்ட பொதுமக்கள் !!!

SHARE

 அதிகாரிகளின் ‘அலட்சிய’ 6 ஆண்டு கால மக்கள் போராட்டம்: கோவை அருகே பேரூராட்சியை அதிரடியாக முற்றுகையிட்ட பொதுமக்கள் !!!

கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4 வது வார்டு பகவான் கார்டன் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக போராடியும் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4 வது வார்டு பகுதியில் 2016ம் ஆண்டு பகவான் கார்டன் உருவாக்கப்பட்டு அங்கு சுமார் 70 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலை இதுவரை தார் சாலை போடப்படாமல் மண் சாலையாக உள்ளது. இதன் காரணமாக மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறி நடந்து கூட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. மேலும் பள்ளி வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் அப்பகுதிக்கு வருவதில்லை.

இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு முதல் பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு என அனைத்து இடங்களில் தார் சாலை அமைத்துத் தரக்கோரி மனு அளித்திருந்தனர். கடந்த 6 ஆண்டுகளாக போராடியும் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தனிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் 20 நாட்களுக்கு சாலை அமைப்பதற்கான ஆனை வழங்கப்பட்டு 2 மாதங்களில் தார் சாலை அமைத்துத் தருவதாக செயல் அலுவலர் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து தெரிவித்த பொதுமக்கள் 6 ஆண்டுகள் காத்திருந்து விட்டோம் இன்னும் 2 மாதங்கள் காத்திருப்போம் அப்போதும் சாலை அமைக்காவிட்டால் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.


SHARE

Author: verified_user

0 கருத்துகள்: