நள்ளிரவில் சோகம்... பிக்கப் வாகனத்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் துடிதுடித்துப் பலி: கோவை கொடூர விபத்து - மற்றொரு இளைஞர் உயிருக்குப் போராட்டம் !!!
கோவை பங்கஜா மில் சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மற்றொரு இளைஞர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை பங்கஜா மில் சாலையில் நேற்று இரவு இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் வந்த பிக்கப் வாகனம் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மற்றொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயிரிழந்த இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவரது அடையாளம் மற்றும் சொந்த ஊர் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிக்கப் வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்: