செவ்வாய், 14 ஜூலை, 2026

சாலையோர மரத்திற்கு ‘ஆசிட்’ ஊற்றி பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்... கோவையில் அரங்கேறிய கொடூரம் - மர்ம நபர்களின் வெறிச்செயலால் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி !!!

SHARE

 சாலையோர மரத்திற்கு ‘ஆசிட்’ ஊற்றி பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்... கோவையில் அரங்கேறிய கொடூரம் - மர்ம நபர்களின் வெறிச்செயலால் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி !!!

நல்ல நிலையில் இருந்த பசுமை மரத்தை திட்டமிட்டு எரித்த நபர்; மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!!

கோவை, தெலுங்குபாளையம் பகுதியில் சாலையோரத்தில் நன்கு வளர்ந்து நல்ல நிலையில் இருந்த மரத்திற்கு ஆசிட் மற்றும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் மரம் கடுமையாக சேதம் அடைந்து உள்ள நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். உயிருடன் வளர்ந்து வந்த மரங்களை திட்டமிட்டு சேதப்படுத்தும் இதுபோன்ற செயல்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கூறி உள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை உடனடியாக கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாலையோர மரங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: