வியாபாரியிடம் ரூபாய் மூன்று கோடி மோசடி - நகைக்கடை உரிமையாளர் கைது !!!
கோவை வியாபாரியிடம் ரூபாய் 3 கோடி தங்க நகை மோசடி செய்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கோவை, ராஜவீதி அசோக் நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் தங்க நகைகளை தயார் செய்து நகைக்கடை வியாபாரிகளுக்கு கொடுப்பது வழக்கம், இவருக்கு மதுரை தெற்கு ஆவனி மூல வீதியில் நகைக்கடை நடத்தி வரும் சுதர்சன் என்பவர் அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து தங்க நகைகளை கொடுத்தால் 20 நாட்களில் விற்று பணமாக தருவதாக சுதர்சன் கூறி உள்ளார். அதன்படி தொடக்கத்தில் தங்க நகைகளை வாங்கி விற்று பணம் கொடுத்து உள்ளார். இதனால் சுதர்சன் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இதை அடுத்து ஆனந்தன் ரூபாய் 3 கோடி மதிப்பு உள்ள தங்க நகைகளை சுதர்சனிடம் கொடுத்து உள்ளார். ஆனால் அதற்குரிய பணத்தை சுதர்சன் கொடுக்கவில்லை, இது பற்றி பலமுறை கேட்டும் அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இது குறித்து ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மதுரை நகைக்கடை உரிமையாளர் சுதர்சனை கைது செய்தனர்.

0 கருத்துகள்: