மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா... கோவையில் மாணவர்கள் பட்டாசு வெடித்து மெகா கொண்டாட்டம்: ஜீவா இல்லத்தில் கம்யூனிஸ்ட் அமைப்பினர் இனிப்பு வழங்கி ஆரவாரம் !!!
கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் CJP கட்சிக்கு ஆதரவாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், அமைச்சர் ராஜினாமா செயத்தை தொடர்ந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட்தேர்வு முறைகேடுகளுக்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. அவர்களுக்கு ஆதரவாக கோவையில் இந்திய கம்யூ கட்சி அலுவலகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் இன்று ராஜினாமா செய்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுட்ட மாணவர்கள் கொண்டாட்களில் ஈடுபட்டனர்.
பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மாணவர்கள் உற்சாகமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் அனுமதி இன்றி இடையூறு ஏற்படுத்தும் விதமாக இப்படி செயல்படக்கூடாது என அறிவுறுத்திய நிலையில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டனர்.

0 கருத்துகள்: