திங்கள், 20 ஜூலை, 2026

கள்ளக்காதல் விவகாரத்தில் மிரட்டி லஞ்சம் வாங்கிய காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட் ; பொள்ளாச்சியில் இளைஞரை அடித்த கொடூரம் - ஆடியோ வெளியானதும் நடவடிக்கை எடுத்த மாவட்ட எஸ்.பி !!!

SHARE

 கள்ளக் காதல் விவகாரத்தில் மிரட்டி லஞ்சம் வாங்கிய காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட் ; பொள்ளாச்சியில் இளைஞரை அடித்த கொடூரம் - ஆடியோ வெளியானதும் நடவடிக்கை எடுத்த மாவட்ட எஸ்.பி !!!

"பணமும் வேண்டாம்... உயிரோடு விடுங்க!" – வாலிபரின் கண்ணீர் கதறல் எதிரொலி: காவலர்கள் பணியிடை நீக்கும் !!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞரை அடித்துத் துன்புறுத்தியதோடு, பொய் வழக்கு போடுவதாக மிரட்டி ரூ.5,000 லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் (S.I) ஜான்சன் மற்றும் காவலர் நாகராஜ் ஆகியோர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

 கோவை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த முகேஷ் என்ற வாலிபருக்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் அது கள்ளக் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் பணப் பரிவர்த்தனைப் பிரச்சனையில், உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர் நாகராஜ் ஆகியோர் முகேஷை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் “ரூ.5000 கொடுக்கா விட்டால் கொலை முயற்சி பொய் வழக்கு போடுவோம்” என மிரட்டல் விடுத்துப் பலவந்தமாக லஞ்சப் பணத்தைப் பிடுங்கிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.


இந்த விவகாரம் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும், பயந்து போன காவலர்கள் லஞ்சப் பணத்தைத் திரும்பத் தருவதாகக் கூறியபோதும், "எனக்கு அந்தப் பணமே வேண்டாம் சாமி, என்னை உயிரோடு மட்டும் விட்டுடுங்க!" என முகேஷ் கண்ணீர் மல்கக் கதறிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவித் தமிழகக் காவல் துறையையே உலுக்கியது.  

இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் தவறு இழைத்த உதவி ஆய்வாளர் ஜான்சனை மற்றும் காவலர் நாகராஜ் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டு உள்ளார்.
SHARE

Author: verified_user

0 கருத்துகள்: