திங்கள், 10 ஆகஸ்ட், 2026

கோவையில் கல்லூரி விடுதியில் இருந்து நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து செல்லும் மாணவர்கள் ; வீடியோ வைரலால் பெற்றோர்கள் அதிர்ச்சி !!!

SHARE

 கோவையில் கல்லூரி விடுதியில் இருந்து நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து செல்லும் மாணவர்கள் ; வீடியோ வைரலால் பெற்றோர்கள் அதிர்ச்சி !!!

விபரீதம் நேர்ந்தால் யார் பொறுப்பு? கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை !!!

 கோவை மாவட்டம், சூலூரில் இயங்கி வரும் பிரபல ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (RVS College of Arts and Science) விடுதியில் தங்கி உள்ள மாணவர்கள், நள்ளிரவு நேரத்தில் விடுதி காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து வெளியே செல்லும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் இந்த விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர்.

 இந்நிலையில், நள்ளிரவில் விடுதிக் காம்பவுண்ட் சுவரில் ஏறி ஆபத்தான முறையில் வெளியே செல்லும் காட்சிகளைச் அப்பகுதியில் சுற்றி உள்ள குடியிருப்பில் ஒருவர் செல்போனில் பதிவு செய்து உள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

 நள்ளிரவில் சுவரேறி குதித்துச் செல்லும் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் அல்லது விபரீதம் நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது ? விடுதியை விட்டு வெளியேறும் மாணவர்கள் இரவு நேரங்களில் ஏதேனும் சட்டவிரோத அல்லது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், அதற்கான பழியும் கல்லூரிக்கும் மற்ற மாணவர்களுக்கும் அல்லவா சேரும் ? பெற்றோர் நம்பிக்கையுடன் தங்களது பிள்ளைகளைக் கல்லூரியில் சேர்த்து விடுதிப் பாதுகாப்பில் ஒப்படைத்து உள்ள நிலையில், சில மாணவர்களின் இதுபோன்ற ஒழுங்கீனச் செயல்கள் பிற மாணவர்களுக்கும் கெட்ட பெயரை உருவாக்குகிறது.

எனவே, இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் மற்றும் விடுதிக் காப்பாளர் உடனடியாக தலையிட்டு, சுவரேறி குதித்துத் தப்பும் மாணவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விடுதிப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: