"ஓணம் விழாவில் உத்வேக நடனம்" - கோவையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய வானதி சீனிவாசன்!
பா.ஜ.க நிர்வாகி இல்லத்தில் களைகட்டிய கொண்டாட்டம்: தொண்டர்களுடன் இணைந்து ஆடி மகிழ்ந்த முன்னாள் எம்.எல்.ஏ!
ஓணம் திருநாளை முன்னிட்டு கோவை வடவள்ளியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில், பா.ஜ.க தேசிய மகளிர் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு, பாரம்பரிய நடனமாடி ஓணம் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
கோவை மாநகர, மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர், வடவள்ளிப் பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ராஜ பிந்து இல்லத்தில் ஓணம் பண்டிகை விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வருகை தந்தார்.
விழாவில் அமைக்கப்பட்டு இருந்த அழகிய அத்தப்பூக் கோலத்தைப் பார்வையிட்ட அவர், அங்கு இருந்த பெண்களுடனும் பா.ஜ.க தொண்டர்களுடனும் இணைந்து ஓணம் திருநாளின் பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ந்தார்.
தொடர்ந்து அங்கு இருந்தவர்களுக்கு ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், தமிழகத்திலும் கோவையிலும் வாழும் மலையாளி மக்களின் சகோதரத்துவத்தையும் பண்பாட்டையும் போற்றும் வகையில் இந்த விழா அமைந்து இருப்பதாகப் பாராட்டு தெரிவித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தொண்டர்களுடன் இணைந்து நடனமாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

0 கருத்துகள்: