சனி, 15 ஆகஸ்ட், 2026

தமிழ்நாட்டை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதே மிகப்பெரிய சுதந்திரம் தான்’ - சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேச்சு !!!

SHARE

 தமிழ்நாட்டை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதே மிகப்பெரிய சுதந்திரம் தான்’ - சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பேச்சு !!!

தமிழ்நாட்டை லஞ்சம் ஊழலில் இருந்து காப்பாற்றுவதே மிகப்பெரிய சுதந்திரம் தான் என 80 வது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் பேசினார்.

இந்திய நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை ஜார்ஜ் கோட்டை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல் முறையாக முதலமைச்சர் விஜய் தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காலை சுமார் 7:45 மணி அளவில் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய், காவல்துறையின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்புடன் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முதலமைச்சர் விஜய்-யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா, நடிகை த்ரிஷா ஆகியோர் இவ்விழாவில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தனர். காவல்துறை அணிவகுப்பு மரியாதையை அடுத்து, முதல் முறையாக கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய முதலமைச்சர் விஜய், அதற்கு ‘சலியூட்’ அடித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், ”நம்மை அடிமையாக வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலே மக்கள் மத்தியில் ஒரு ஒற்றுமை ஏற்படும். அனைவரும் ஒன்றாக யோசித்து ஒன்று சேருவார்கள். அவ்வாறு ஒன்று சேரும் இடத்தில் தான் சாதி ஒழியும், மதம் ஒழியும், மொழி இனம் ஆகிய அனைத்தும் உடைந்து நொறுங்கும். இதுதான் உண்மையான சுதந்திரம்.

தமிழ்நாட்டை லஞ்சம் ஊழலில் இருந்து காப்பாற்றுவதே மிகப்பெரிய சுதந்திரம் தான். 80 வது சுதந்திர தின நாளில் நாட்டின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, இன்று இந்த விழாவில் என்னை பேச வைத்து இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். பொதுவாழ்வில் சமரசம் இருக்கக் கூடாது. மக்கள் பணி தான் முக்கியமானது. அதை நோக்கி தான் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. அந்த நோக்கில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை, மத்திய அரசின் நிர்வாக ரீதியான ஒத்துழைப்போடு செயல்படுத்த இருக்கிறோம்.

தமிழ்நாடு, கொள்கைகள் என்று வந்துவிட்டால் மாநிலங்களுக்கு எதிரான கொள்கை முடிவுகளை தமிழக வெற்றிக் கழக அரசு எப்போதும் எதிர்க்கும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இதற்கு முன்னால் கொண்டு வந்த ’அம்மா உணவகம்’ போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெரியார் பிறந்த நாளன்று ‘காலை உணவு திட்டம்’ விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அனைவரும் ஓட்டு போட்டு, உங்கள் அண்ணனை, தம்பியை, பிள்ளையை, ஜெயிக்க வைத்து முதலமைச்சராக விட்டீர்கள். அதனால் நம் கடமை எல்லாம் முடிந்து விட்டது என்று யாரும் ஒதுங்கிப் போய் விடாதீர்கள். இனிமேல் தான் நீங்கள் எங்களுடன் கூடவே இருக்க வேண்டும். உறுதியாக அரசுடன் கூடவே இருக்க வேண்டும். வாருங்கள் நாம் அனைவரும் கடமையை சேர்ந்து செய்வோம்” என்று மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய் தகைசால் தமிழர் விருது எம். கிருஷ்ணசாமிக்கும், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருது டாக்டர் வி. மோகனுக்கும், துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது நௌஷீன் பானு சந்திற்கும் வழங்கி கௌரவித்தார்.

மேலும், காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 15 பேருக்கு பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் விஜய் கெளரவித்தார். தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பதக்கங்களை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: