செவ்வாய், 8 செப்டம்பர், 2026

ஒரே ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு அபராதம் !

SHARE

கோவை, அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் கல்லூரி மாணவிகள் 4 பேர் ஒரே ஸ்கூட்டரில் சென்றனர்.

அப்பொழுது அவர்கள் ஹெல்மெட்டும் அணியவில்லை, அத்துடன் அவர்கள் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எனவே போக்குவரத்து விதிகளை மீறிய அந்த மாணவிகள் மீது காவல் துறையினர் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை அடுத்து பீளமேடு போக்குவரத்து போலீசார் அந்த மாணவிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் ஒரு மாணவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஒரே ஸ்கூட்டரில் நான்கு பேர் சென்றதும் தெரியவந்தது. இருந்த போதிலும் அவர்கள் போக்குவரத்து விதியை மீறியதால் அந்த நான்கு பேருக்கும் தலா ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் அந்த மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: