கோவை புதூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் பாலாஜி என்பவரின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை !!!
கோவை, குனியமுத்தூர் அருகே உள்ள கோவை புதூரில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பாலாஜி வசித்து வருகின்றார். இவரது அலுவலகம் இராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழிலில் பாலாஜி ஈடுபட்டு வரும் நிலையில் முறையாக வருமான வரி செலுத்தப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் தொழிலதிபர் பாலாஜியின் வீடு மற்றும் சுங்கத்தில் உள்ள அலுவலகம் ஆகிய இரு இடங்களில் 4 கார்களில் வந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் முதலில் வீட்டில் சோதனையை துவங்கினர்.
இதனைதொடர்ந்து சுங்கம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் 10 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைபற்றியுள்ளனர். தொடர்ந்து சோதனையானது நடைபெற்று வருகின்றது.

0 கருத்துகள்: