பட்டப்பகலில் பஜாரில் புகுந்த ஒற்றை யானை... பிரதான சாலையில் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு: நீலகிரி பிதர்காட்டில் மக்கள் அலறியடித்து ஓட்டம் !!!
நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பந்தலூர், பிதர்காடு உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் யானைகள் சில சமயங்களில் பகல் நேரத்திலேயே சர்வ சாதாரணமாக உலா வருகிறது. இந்த நிலையில் பிதர்காடு பஜார் பகுதியில் இன்று காலை திடீரென ஒற்றை யானை உலா வந்தது இதனை கண்ட மக்கள் வீடுகளுக்குள்ளும் கடைகளுக்குள்ளும் தஞ்சம் அடைந்தனர். யானையை வனத்துறையினர் விரட்டிய போது பிரதான சாலையில் காட்டு யானை வேகமாக ஓடியது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பட்டப் பகல் நேரத்திலேயே யானை உலா வந்ததால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். தொடர்ந்து யானையை விரட்டிய வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர் .

0 கருத்துகள்: