செவ்வாய், 7 ஜூலை, 2026

காற்றின் கோரத்தாண்டவம்: கோவையில் போலீஸ் ஸ்டேஷன் முன் வேரோடு சாய்ந்த மரம் ; கார் நொறுங்கி பரபரப்பு !!!

SHARE

காற்றின் கோரத்தாண்டவம்: கோவையில் போலீஸ் ஸ்டேஷன் முன் வேரோடு சாய்ந்த மரம் ; கார் நொறுங்கி பரபரப்பு !!!

தென்மேற்கு பருவமழையின் ஆக்ரோஷத்தால் விபரீதம்; அதிரடியாகக் களமிறங்கி மரத்தை அப்புறப்படுத்திய ‘காக்கிகள்’!

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம் மற்றும் டி.எஸ்.பி அலுவலகம் ஒரே வளாகத்தில் உள்ளது.இதனிடையே நேற்று மாலை தென்மேற்கு பருவமழை காரணமாக காற்றின் வேகம் சற்று அதிகமாகவே இருந்தது.

இந்த நிலையில் காவல் நிலையம் முன்பு இருந்த ராட்சத மே ப்ளவர் மரம் ஒன்று காற்றின் வேகம் காரணமாக வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது, அச்சாலையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது விழுந்து காரின் முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது.

நல்வாய்ப்பாக காரில் இருந்த நபர்கள் மற்றும் சாலையில் சென்றவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.உடனடியாக அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டு சாலையில் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: