செவ்வாய், 1 செப்டம்பர், 2026

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய் - மனமகிழ காவிரி நீருக்கு மலர் தூவி மரியாதை!

SHARE

சாலை மார்க்கமாக மேட்டூர் அணைக்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். அணையில் இருந்து வெளியேறிய காவிரி நீரில் பூக்கள், நெல் ஆகியவற்றை தூவி மரியாதை செலுத்தினார்.

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து இன்று (செப்.1) நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்காக காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் சேலம் வந்தடைந்தார். பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்த முதலமைச்சருக்கு அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து, சாலை மார்க்கமாக மேட்டூர் அணைக்கு வந்த முதலமைச்சர் விஜய். வழியெங்கும் திரளாக குவிந்து இருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வாகனத்தின் மேல் இருந்து பொதுமக்களின் வரவேற்பை ஏற்றப்படி முதலமைச்சர் விஜய் மேட்டூருக்கு வருகை தந்தார்.

அதனைய அடுத்து, மேட்டூர் அணை நுழைவாயிலில் அவருக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். அதனை ஏற்றுக் கொண்டு அணைக்கு சென்ற அவர், காவிரியை வணங்கி, மேல தாளங்கள் முழங்க அணையின் மதகுகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, அணையில் இருந்து வெளியேறிய காவிரி நீரில் பூக்கள், நெல் ஆகியவற்றை தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், அங்கு கூடி இருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்க்கு, காவிரியில் மேட்டூர் அணையின் கட்டுமானம் தொடர்பாக வைக்கப்பட்டு இருந்த புகைப்படங்களை அரசு அதிகாரிகளுடன் பார்வையிட்டார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியவர்கள் உடன் இருந்தார்.

தற்போது அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் 12 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். முதலமைச்சரின் வருகையையொட்டி, சேலம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு அணையில் நீர் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நீர் வரத்து அதிகரித்தது. அதனை அடுத்து, காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரில் அளவு அதிகரித்து.

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த 4ஆம் தேதி முதல் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.15 அடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், டெல்டா பாசனத்திற்கு தேவையான தண்ணீரை முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து திறந்து வைத்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: